மாகாணசபையை தமிழ் மக்கள் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை
Admin
Mar 10,2023
அரசாங்கம் சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், மாகாணசபையை தமிழ் மக்கள் தீர்வாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இது அதிகார பகிர்வின் ஆரம்ப புள்ளி எனவும் தெரிவித்தார்.