இராணுவ வசமானது யாழ்ப்பாணம் ,சோதனைகள் தீவிரம் - மக்கள் அச்சத்தில்

Admin
Nov 08,2022

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து ராணுவத்தினரால்  முக்கியமான இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை  சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர்  ஜெனரல்  சந்தன விஜயசுந்தர தெரிவித்தார்,

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற நிலையில்

குறித்த விடயம்  தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால்  போதை பொருள்  பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில்  ஆராயும் விசேட கூட்டம்  இடம்பெற்றிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் ராணுவத்தினரால் சோதனை சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் போதை பொருள் விற்பனை செய்வோர் மற்றும் ப
போதை பொருள் பாவி ப்போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ராணுவ முகாமில்  தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை  கைது செய்ய உதவியாக இருக்கும் என  தெரிவித்ததோடு

 எனினும் இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில்  போதை பொருளை கட்டுப்படுத்தும்மமுகமாக இராணுவத்தினரால்  யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் எனவே பொதுமக்கள் இந்த விடயத்திற்கு நமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவே நமது எதிர்கால சந்ததியினரை போதைக்கு அடிமையாக்குவதற்கு நாங்கள் இடமளிக்காது போதைப்புக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவே

 சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன எனவே பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில்  போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு எமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.