தொடர்பில்லை என்றால் பயம் எதற்கு?; கார்டினல் கேள்வி

Admin
Aug 21,2022

தங்களுக்கும் தொடர்பிருப்பதாலேயா ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள நாட்டு தலைவர்கள் தயங்குகிறார்கள் என கார்டினல் மெல்கம் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதில் ஏதோ இரகசியம் இருக்கிறது. தலைவர்கள் நேர்மையானவர்கள் என்றால், அவர்களுக்கும் தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்றால், விசாரணைகளை மேற்கொள்ள பயப்படத்தேவையில்லை எனவும் கார்டினல்  தெரிவித்துள்ளார்.